நாலு மணி நேரமா
அப்படி என்னதாண்டா
பேசுவீங்க?
எப்படி சொல்வது என் நண்பனிடம்?
ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
மாட்டேனையும் தவிர
நாம் வேற எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை என்று.
இறுக்கியணைத்த உந்தன் கதகதப்போ,
காயங்கள் தந்த நகக் கீறல்களோ
'என் செல்லம்' எனும் உன் கொஞ்சலோ
சற்றும் சொல்லவில்லை.
நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை.
Onne onnu koden.
Matten.
Please paaa.
Mudiyaadhunna mudiyaadhudhaan.
Podi.
Podaaaaaaaaaaa.
SMS ல் கூட
ஒற்றை முத்தத்தை
தர மறுக்கும்
உன் திமிரை விடவா
அழகிய கவிதையை
எழுதிவிடப் போகிறேன்???
பி.கு. இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? என்று கேட்க நினைக்கும் நண்பர்களிற்கு. இது "காதல்" அவ்வளவுதான்.
Labels: காதல்
7 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
காதல் தொடர வாழ்த்துக்கள் :)
இந்த படங்கள் இல்லாமல் இருந்திருந்தால், உங்களின் கவிதை...கதை...மொக்கை..
சரி "காதல்" னு வைச்சிக்கலாம் இன்னும் அழகாயிக்குமோ?!
எங்களுக்கு எங்க புரியப்போகுது.
நீங்க என்சாய் பண்ணுங்கோ!....
யாரோ சொல்லியிருந்தார்கள்,
இதயத்தின் விரிதலால் வந்த உதடுகளின் குறுகல் என்று, ஆங்கிலத்தில் சொல்வதானால்
Contraction of lips due to expansion of heart. என்று சொல்வார்கள்.
காதல் தொடர வாழ்த்துக்கள்.