Home | About Me | E-Mail |



one more test page

one more test page for aggregation....

one more test

Posted by நந்தா 2:34 AM 2 comments  



Aggregation test

this is a test post checking for aggregation......

Posted by நந்தா 2:21 AM 0 comments  



Model matrimony1

Posted by நந்தா 4:11 AM 0 comments  



Model Matrimony

Posted by நந்தா 4:10 AM 0 comments  



Form View

Posted by நந்தா 4:14 AM 0 comments  



My Another form

Posted by நந்தா 11:03 PM 0 comments  



My Form

Posted by நந்தா 10:45 PM 0 comments  



எனது புதிய முகவரி

வலைப்பதிவுலக நண்பர்களிற்கு வணக்கம்.

இதுவரை http://nandhakumaran.blogspot.com என்ற வலைப்பதிவிலிருந்து எழுதிக் கொண்டிருந்த நான் இப்போது http://blog.nandhaonline.com எனும் சொந்த தளத்திளிருந்தே பதிவுகளை எழுதப்போகிறேன். தமிழ் மணத்திலும் பதிவு செய்தாயிற்று. முகவரியும், வார்ப்புரு மட்டுமே மாற்றம் பெற்றுள்ளது. மற்றவை எல்லாம் அப்படியேதான்.

காரணம் எல்லாம் பெரிசா ஒண்ணுமில்லீங்க. சொந்தத் தளத்திலேயே இயங்குவதால், புதிது புதிதாய் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதென்பது மிகவும் எளிது. பொறுப்புணர்ச்சியும் அதிகமாகும். வார்ப்புருக்களில் கொஞ்சமேனும் வித்தை காட்டலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இணையத்தில் தமிழ் மற்றும் வலைப்பதிவுகளின் அசுர வேக பரிணாம வளர்ச்சிக்கு தனித்தளத்திலிருந்து இயங்குவது முக்கியம் என்று நான் கருதுவதால், இதோ நானும் புது வீட்டைத் திறந்து காலடி எடுத்து வைத்திருக்கிறேன், உங்களின் ஆதரவும் நட்பும் தொடர்ந்து கிட்டும் என்ற நம்பிக்கையில்….



Posted by நந்தா 11:01 PM 1 comments  



ஒற்றை முத்தம் - ஒரு நிமிடக் காதல் கதை



ட்ரிங் ட்ரிங்

என்னடா

இன்னிக்கு ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்திடுப்பா

அடிப்பாவி! இப்பதான் வீட்டுல இருந்து கிளம்பி ஆஃபீஸ்க்கே வந்து சேர்றேன்.அதுக்குள்ள ஃபோனை போட்டு இன்னிக்கு சீக்கிரம் வரச் சொல்ற. இன்னிக்குன்னு பார்த்து இங்கயும் வேலை அதிகமா இருக்குமா.

போடா உனக்கென்ன! எனக்கென்னமோ இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும்னு தோணுது. யேய் ப்ளீஸ்பா, இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வாயேன்.

ம்ம்ம்... சரி இன்னிக்கு நான் சீக்கிரம் வந்துட்டா என்ன தருவ.

என்ன வேணும்.

நீயே சொல்லு.

ஹ்ம்ம். நேத்து ஆசையா கேட்டியே. நான் கூட வெட்கப்பட்டுக்கிட்டு மாட்டேன்னுட்டனே. அதைத் தரேன்.

என்ன கேட்டேன். மறந்துட்டனே.

திருடா தெரியாத மாதிரி நடிக்கறியா. அதான் முத்து படத்தில ரஜினி கேட்கற மாதிரி கேட்ட இல்லை. தரேன். போதுமா?

நிஜமா?

நிஜம்ம்ம்ம்ம்ம்மாதான்

அப்புறம் பேச்சு மாற மாட்டியே?

மாட்டேன்.

சத்தியமா?

சத்... யேய், நான் சொன்னா நம்ப மாட்டியா நீ.

சரி சரி நம்பறேன்.அதுக்கு முன்னாடி நீ ஃபோனை வெச்சுட்டு வந்து கதவைத் திற.

கதவை.....What? என்ன சொன்ன.

வந்து கதவைத் திற. தெரியும்.
...
...
...
...
...
...
...
...
...
...

ப்பச்சக்..

Posted by நந்தா 2:22 AM 12 comments  



ஒற்றை முத்தம் - கவிதைகள்


நாலு மணி நேரமா
அப்படி என்னதாண்டா
பேசுவீங்க?

எப்படி சொல்வது என் நண்பனிடம்?

ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
மாட்டேனையும் தவிர
நாம் வேற எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை என்று.


இறுக்கியணைத்த உந்தன் கதகதப்போ,
காயங்கள் தந்த நகக் கீறல்களோ
'என் செல்லம்' எனும் உன் கொஞ்சலோ
சற்றும் சொல்லவில்லை.

நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை.



Onne onnu koden.
Matten.
Please paaa.
Mudiyaadhunna mudiyaadhudhaan.
Podi.
Podaaaaaaaaaaa.

SMS ல் கூட
ஒற்றை முத்தத்தை
தர மறுக்கும்
உன் திமிரை விடவா
அழகிய கவிதையை
எழுதிவிடப் போகிறேன்???


பி.கு. இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? என்று கேட்க நினைக்கும் நண்பர்களிற்கு. இது "காதல்" அவ்வளவுதான்.

Posted by நந்தா 1:19 PM 7 comments