Home | About Me | E-Mail |

ஹமாம் அம்மா

"புருஷனை கைக்குள்ள போட்டுக்கோடி,
அப்போதான் காலம் தள்ளமுடியும்!"

அக்காவிற்குச் சொன்ன
அதே அம்மாதான்
என்னிடம் சொன்னாள்.
"உன் பொண்டாட்டி,
தலையணை மந்திரம் ஓதுவா.
அவ முந்தானைல சிக்கிக்காத
நீ ஆம்பளைடா!"

அடிச்சு சொல்லுவேன்.
எல்லா அம்மாக்களும்
'ஹமாம்' அம்மா கிடையாதுன்னு.

7 Comments:

  1. Hariharan # 03985177737685368452 said...
    ஒரு பெண்ணின் மனதைப் பெண்ணால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியுங்க!

    ஆண் என்பவன் தாய்க்கும் தாரத்துக்கும் இடையே மாட்டி சாண்ட்விச் ஆகிறவன்!

    ஆண் என்பவன் தன் தாய், தாரம், சகோதரிக்கு இடையில் கொத்துபரோட்டா ஆகிறவன்!

    ஆண் பித்தளை என்பவன் தன் அனுமதியிலாமலே பேரிச்சம்பழத்துக்கு எடைக்கு எடை எக்ஸ்சேஞ்ச் ஆகிறவன்!
    சுந்தர் / Sundar said...
    அருமை !
    surya said...
    simply superb.reality is different from life
    லக்ஷ்மி said...
    தாம்பத்தியமோ தாய்மையோ எங்கும் இரு முனையிலிருந்தும் பரஸ்பர அன்பு பரிமாற்றம் என்பது மட்டுமே இருக்க வேண்டியது போய் பெண் என்பவள் சாகசங்களின் மூலமே அந்த உறவுகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் அவலத்தை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் நந்தா. நல்ல கவிதை.
    சென்ஷி said...
    நினைச்சு நினைச்சு சிரிப்பு வருது..
    இப்ப ஒரு பதிவு படிச்சு உடனே இதையும் படிச்ச விளைவு..

    நல்லாருக்குங்க கவித..

    சென்ஷி

    (பி.கு: இது ஒரு உள்குத்து பின்னூட்டம். இங்கு பிரசுரம் ஆகும் என்பதால் வெளியிடுகிறேன் :))
    நந்தா said...
    வாங்க ஹரிஹரன் ரொம்ப அடிபட்டிருப்பீங்க போல இருக்கே.

    //பரஸ்பர அன்பு பரிமாற்றம் என்பது மட்டுமே இருக்க வேண்டியது போய் பெண் என்பவள் சாகசங்களின் மூலமே அந்த உறவுகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் அவலத்தை//

    சொல்ல வந்ததை ரொம்ப சரியா புரிஞ்சு இருக்கீங்க லட்சுமி.

    வாங்க சென்ஷி. உங்க உள்குத்தை இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா? அப்படி என்ன பதிவுங்க அது நினைச்சு நினைச்சு சிரிக்கற அளவுக்கு. சொன்னா நாங்களும் சிரிப்போம்ல.

    வருகைக்கு நன்றி சூர்யா & சுந்தர்.
    மருதநாயகம் said...
    ஹமாம் முதல் எல்லோரும் அம்மா பற்றியே பெசுகிறீர்கள் அப்பா பற்றி ஏன் பேசுவதில்லை

Post a Comment